Thursday, February 27, 2014

திரை அரங்கு உரிமையாளர்கள் தான் முதல் ரசிகர்கள் - அஜய்













சின்ன படங்களுக்கு திரை கிடைப்பதில்லை என்ற பொதுவான புகாருக்கு முற்றிலும் எதிர் மாறான கருத்தை சொல்கிறார் 'ஆதியும் அந்தமும்' படத்தின் கதாநாயகன் அஜய்.

சின்ன திரையில் மிகபிரபலமான கோலங்கள் ஆதி என்று அழைக்கப்படும் அஜய் 'ஆதியும் அந்தமும்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . கௌஷிக் இயக்கத்தில், எல் . வீ.கணேசன் இசை அமைப்பில் , வாசன் ஒளிப்பதிவில் , என் கே கிராப்ட் மற்றும் ஆர் எஸ் ஆர் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து திரையிட தயாராக உள்ளது .

திரை உலக பிரமுகர்களால் பெரிதும் பாராட்டபட்ட இந்த முற்றிலும் மாறுபட்ட த்ரில்லெர் படத்துக்கு திரை அரங்கு உரிமையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை சொல்லி பூரிப்பு அடைகிறார் நாயகன் அஜய் .

' எனக்கு கிடைத்த ஊக்கம் தரும்வார்த்தைகளும், திரை அரங்கு குறித்த உத்திரவாதமும் என்னை மிகவும் பெருமைக்குரியவன் ஆக்குகிறது . திரை அரங்கு உரிமையாளர்கள் தான் முதல் ரசிகர்கள் . அவர்களின் சினிமா குறித்த அனுபவம் என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் தேவை என்று கூறினார் .

No comments:

Post a Comment