Saturday, March 8, 2014

ஹீரோவை எட்டி உதைத்த நாயகி


மறுமுகம் படத்தினை எண்டெர்டைன்மெண்ட் அன்லிமிட்டெட் சார்பில் சஞ்சய் தயாரிக்க, கமல் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.


படத்தில் வரும் 'நீயில்லாத' என்ற பாடல் காட்சியை அருவியில் படமாக்கினர். அப்போது படத்தின் நாயகி ஷில்பி நாயகனை எட்டி உதைப்பது போல் செய்யவேண்டும். இதில் நிஜமாகவே நாயகனை, நாயகி எட்டி நெஞ்சில் உதைத்துவிட நாயகனான கிஷிக்கு சரியான கோபம்.

தன்னை இதுவரை யாரும் எட்டி உதைத்ததில்லை. இந்தப் பெண் தன்னை நெஞ்சில் மிதித்துவிட்டார்களே என கோபத்தில் ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டார். ஷூட்டிங் அதிகநேரம் தடைபட்டதால்... நாயகி சென்று தனது வருத்தத்தை கிஷியிடம் தெரிவித்து சாமாதானம் செய்தார். முதல் படமென்பதால் ஷாட்டில் கொஞ்சம் அதிகப்படியான வேகம் வந்துவிட்டது. தவறு என்மீதுதான். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று ஷில்பி தெரிவிக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது.


மறுமுகம் மார்ச் 14-ல் வெளிவருகிறது.

No comments:

Post a Comment