Wednesday, March 5, 2014

தொழில் நேர்த்திக்கும் தொழில் பக்திக்கும் நயன்தாரா ஒரு முன்னுதாரணம்


தொழில் நேர்த்திக்கும் தொழில் பக்திக்கும் நயன்தாரா ஒரு முன்னுதாரணம் . தொழில் ரீதியாக பல்வேறு போட்டிகளை சந்தித்தாலும் அவர் முன்னிலையில் இருப்பதற்கு அவரது தொழில் பக்திதான் காரணம் .

தன்னுடைய கதாபாத்திரத்தை முன்னிலை படுத்தவும் , ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற நீங்கா புகழ் பெறவும் அவர் எள்ளளவும் சமரசம் செய்து கொள்வதில்லை . 

'கஹானி' ஹிந்தி படத்தின் தமிழ் ஆக்கமான ' நீ எங்கே என் அன்பே' படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்த போது கூட அவர் ஹிந்தி பதிப்பில் நடித்த வித்யா பாலன் போல் நடிப்பாரோ என்று சிலர் சந்தேகித்து இருக்கலாம் . ஆனால் இயக்குனர் சேகர் கம்முலாவின் கூற்றுப்படி நயன்தாராவின் திரை பயணத்தில் ' நீ எங்கே என் அன்பே ' ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறுவதோடு , முன்னுதாரணமாக ஒரு சில சம்பவங்களை குறிப்பிட்டார்.'

ஒரு முக்கியமான உணர்சிகரமான காட்சி படமாக்கி கொண்டு இருந்தோம் . அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன் . மிகவும் நேர்த்தியாக , அழகாக , நீளமாக இருந்தது . ஆனால் கதாபாத்திரத்தின் படி , அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் , இந்த குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன். அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு பின்னோக்கி நகர , நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன் . சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் நறுக்க பட்டு இருந்தது. 

இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிக படுத்தியது. ஏனன்றால் அந்த தருணத்துக்கு முன்னரே நான் அந்த காட்சியில் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக இருந்தேன். 

இன்னொரு சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக அவருக்கு பதிலாக டுப் உபயோகிக்கலாம் என இருந்தேன் . ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சி கூட. இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாக , ஆணித்தரமாக சொல்லி விட்டு நடித்தார் . அவரது அந்த கடின உழைப்பின் பலன் , அந்த காட்சி படமாக்க பட்ட ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது.

No comments:

Post a Comment